21 காளைகளை அடக்கி முதலிடம்.. காரை தட்டிச் சென்றார் கார்த்திக்...

அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 21 காளைகளை அடக்கி முதலிடம் பெற்ற கார்த்திக் காரை தட்டிச் சென்றார்.
x
மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மாலையோடு நிறைவுபெற்றது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 1,020 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவிழ்த்து விடப்பட்ட 1,020 காளைகளுக்கும், தங்கக்காசு பரிசாக வழங்கப்பட்டது. 

அனல்பறந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 21 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்திக் என்ற இளைஞர் முதல்பரிசை தட்டிச்சென்றார். முதல்பரிசை வென்ற கருப்பாயூரணி கார்த்திக்கிற்கு திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் சார்பில் வழங்கப்பட்ட காரை பரிசாக அமைச்சர்கள் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் மூர்த்தி ஆகியோர் வழங்கினர். 
 

Next Story

மேலும் செய்திகள்