"ஜன.31 வரை விடுமுறை" - "விடுமுறையாக கருத வேண்டாம்" - அமைச்சர் அன்பில்மகேஷ்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விடுமுறை என கருதாமல், வீட்டில் இருந்து கல்வி கற்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்
x
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி கட்டடத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜனவரி 31ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை விடுமுறை என கருதாமல் பொதுத்தேர்வு மாணவர்கள் வீட்டில் இருந்தே கல்வி கற்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மாணவர்கள் பாடம் தொடர்பாக அரசு சார்பில் யூடியூபில் 8,000 வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளதாகவும், அதனை பார்த்தும், கல்வி தொலைக்காட்சி மூலமும் பாடம் கற்கலாம் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.   


Next Story

மேலும் செய்திகள்