"அரசு குடியிருப்புகள் ஆக்கிரமிப்பு இடத்தில்தான் உள்ளன" - சீமான்

அரசின் குடியிருப்புகள், நீதிமன்றங்கள் உள்ளிட்டவை ஆக்கிரமிப்பு இடத்தில்தான் உள்ளன அவற்றை எல்லாம் என்ன செய்வது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
x
அரசின் குடியிருப்புகள், நீதிமன்றங்கள் உள்ளிட்டவை ஆக்கிரமிப்பு இடத்தில்தான் உள்ளன அவற்றை எல்லாம் என்ன செய்வது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை, ஈஞ்சம்பாக்கம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பட்டா வழங்க காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்த அவர் அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆக்கிரமிப்பு இடத்தில் வசிக்கும் மக்களுக்கு  ஏன் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவை எல்லாம் வழங்கப்பட்டுள்ளன எனவும், ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அவர்களை இங்கிருந்து அப்புறப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்