படப்பை குணாவிற்கு உதவிய காவலர்கள் என புகார் ! | #ThanthiTv

ரவுடி படப்பை குணாவிற்கு உதவியாக இருந்த காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 40 பேர் அதிரடியாக தென் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
x
ரவுடி படப்பை குணாவிற்கு உதவியாக இருந்த காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 40 பேர் அதிரடியாக தென் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கொலை, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என 42 க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி படப்பை குணா தலைமறைவாக இருந்து வருகிறார். இவருக்கு காவல்துறையில் பணியாற்றும் உதவி ஆணையர் முதல் காவலர் வரை உதவி புரிந்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகேஷ்வரி, ஸ்ரீபெருமந்தூர் ஆய்வாளராக பணியாற்றிய ராஜாங்கம் மற்றும் மணிமங்கலம் ஆய்வாளரான பாலாஜி ஆகிய மூன்று காவல் ஆய்வாளர்களும் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதே போல 4 உதவி ஆய்வாளர்கள், 15 தலைமைக் காவலர்கள் உட்பட 40 பேர் தென் மண்டல பகுதிக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விரைவில் உதவி ஆணையர்களும் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்