செங்கரும்பு கட்டுகளாலான காளை மாடுகள் !

காஞ்சிபுரத்தில் செங்கரும்பு கட்டுகளால் செய்யப்பட்ட காளை மாடுகளுடன் விவசாயிகள் தங்கள் குடும்பங்களுடன் பொங்கலைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
x
காஞ்சிபுரத்தில் செங்கரும்பு கட்டுகளால் செய்யப்பட்ட காளை மாடுகளுடன் விவசாயிகள் தங்கள் குடும்பங்களுடன் பொங்கலைக் கொண்டாடி மகிழ்ந்தனர். கீழ்கதிர்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தை சேர்ந்த செந்தில்குமார் செல்வி தம்பதியினர். தங்கள் தோட்டத்தில் உள்ள வீட்டின் முன்பு, 1 டன் எடையில் செய்யப்பட்ட காளை மாடுகளை வைத்து புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்குப் படைத்து பொங்கல் கொண்டாடினர். விவசாயிகள் மற்றும் காளை மாடுளின் சிறப்பை விளக்கும் வகையில் அமைக்கப்பட்ட செங்கரும்பு காளைமாடுகளை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்