சேவல் சண்டை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சேவல் சண்டை நடத்த அனுமதி கோரிய வழக்கில் நிபந்தனைகளுடன் பரிசீலிக்க மாவட்ட காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஈரோடு  ஜம்பை கிராமத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதி கோரிய மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கொரோனா பரவலை தடுக்க,  தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளதை சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ஜல்லிக்கட்டு போட்டிகளை நிபந்தனைகளுடன் நடத்த  தமிழக அரசு அனுமதியளித்துள்ளதாக தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சில நிபந்தனைகளின் அடிப்படையில் சேவல் சண்டை நடத்த அனுமதியளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என பவானி காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்