"சிறந்த காளைக்கு அரசு சார்பில் கார்" - அமைச்சர் மூர்த்தி தகவல்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைக்கு தமிழக அரசு சார்பில் கார் வழங்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
x
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைக்கு தமிழக அரசு சார்பில் கார் வழங்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். உலக புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பொங்கல் தினமான இன்று நடைபெறவுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்தவாறு ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு களிக்க வேண்டும் என்று அமைச்சர் மூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார். மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பு பரிசாக தமிழக முதல்வர் சார்பில் சிறந்த காளைக்கு காரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு இருசக்கர வாகனமும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்