"எந்த பிரச்னையும் இன்றி பயணிக்க ஏற்பாடு" - போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன்

வெளியூர் செல்லும் பயணிகள் எந்த பிரச்னையும் இன்றி பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.
x
வெளியூர் செல்லும் பயணிகள் எந்த பிரச்னையும் இன்றி பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார். சிறப்பு பேருந்து இயக்கம் குறித்து, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பேசிய அவர், பயணச்சீட்டு கிடைக்கவில்லை என பயணிகள் வருந்தாத வகையில் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக குறிப்பிட்டார். பேருந்து வழித்தடங்களில் தரமற்ற முறையிலும், அதிக விலைக்கும் உணவு விற்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். 

Next Story

மேலும் செய்திகள்