கத்தி முனையில் மீன்பிடி உபகரணங்கள் கொள்ளை - இலங்கை கடற்கொள்ளையர்கள் கைவரிசை

நாகை மாவட்டம் புஷ்பவனம் கிராமத்தில் தமிழக மீனவர்களின் படகுகளை வழிமறித்து இலங்கை கடற் கொள்ளையர்கள் வலை மற்றும் மீன்பிடி உபகரணங்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
x
நாகை மாவட்டம் புஷ்பவனம் கிராமத்தில் தமிழக மீனவர்களின் படகுகளை வழிமறித்து இலங்கை கடற் கொள்ளையர்கள் வலை மற்றும் மீன்பிடி உபகரணங்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.  பைபர் படகில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்த இரண்டு படகு மீனவர்களை பத்துக்கும் மேற்பட்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து செல்போன், மீன்பிடி வலை உள்ளிட்ட மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்களை கொள்ளையடித்துவிட்டு சென்றுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்