தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய பாஜகவினர் ! - மோடி குறித்து தரக்குறைவாக பேசியதாக தாக்குதல் !

பல்லடத்தில் பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசியதாக கூறி தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய பாஜக-வை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
x
பல்லடத்தில் பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசியதாக கூறி தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய பாஜக-வை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பஞ்சாப் பாதுகாப்பு குறைபாடு சம்பவத்தை கண்டித்து திருப்பூர் மாவட்டம், பல்லடம் பேருந்து நிலையத்தில் பாஜக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அப்போது, சாலையோரத்தில் தள்ளுவண்டி வியாபாரியான முத்துசாமி, மோடி குறித்து தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து முத்துசாமி மீது பாஜகவினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பாஜக-வை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்