கொல்ல வந்த கணவன் - கத்தியை வாங்கி திருப்பி குத்திய மனைவி

விழுப்புரத்தில் குடும்ப தகராறில் கட்டிட தொழிலாளியை கத்தியால் குத்திக்கொலை செய்த மனைவி போலீசார் கைது செய்தனர்.
x
விழுப்புரத்தில் குடும்ப தகராறில் கட்டிட தொழிலாளியை கத்தியால் குத்திக்கொலை செய்த  மனைவி போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த விளந்தை கிராமத்தை சேர்ந்தவர்  சந்தோஷ். கட்டிட தொழிலாளியான இவரும் சுரேகா என்ற பெண்ணும், ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அபிநயா என்ற மகளும், வெற்றிவேல் என்ற மகனும் உள்ளனர். சந்தோஷ் அவ்வப்போது மது போதையில் மனைவி சுரேகாவிடம் தகராறு செய்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  சந்தோஷ் மது போதையில் மீண்டும் தகராறு செய்து ஆத்திரமடைந்து காற்கறி வெட்டும் கத்தியை எடுத்து சுரேகாவை வெட்ட முயன்றார். இதில் சுதாரித்துக்கொண்ட சுரேகா, சந்தோஷிடமிருந்த கத்தியை பிடுங்கி ஆத்திரத்தில் கணவர் என்றும் பாராமல் அவரது மார்பு பகுதியில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் சுரேகா, விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையம் சென்று நடந்த சம்பவம் பற்றி கூறி சரண் அடைந்தார்.
இதையடுத்து விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், மேற்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சந்தோஷின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்