இன்றும், நாளையும் மட்டும் தரிசனம்... பழனியில் அலைமோதும் பக்தர்கள்

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தரிசனத்திற்காக பக்தர்கள் குவிந்துள்ளனர்.
x
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தரிசனத்திற்காக பக்தர்கள் குவிந்துள்ளனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக வரும் 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையில் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றும், நாளையும் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்பதால் பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் பாதுகாப்பு பணியில் 800க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்