வைகுண்ட ஏகாதசி- பக்தர்களுக்கு அனுமதி

வைகுண்ட ஏகாதசியையொட்டி கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
x
வைகுண்ட ஏகாதசியையொட்டி கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.சென்னை, வேப்பேரியில் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து  செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருகிற 23 ஆம் தேதி ஞாயிற்று கிழமையன்று வடபழனி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என கூறினார். வெள்ளி, சனி , ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்த அவர், வைகுண்ட ஏகாதேசி தினத்தையொட்டி கட்டுப்பாடுகளுடன் கோவில்களில் வழிபாடு செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கூறினார்


Next Story

மேலும் செய்திகள்