“ஏன் அப்பா அம்மாக்கு கூட தகவல் சொல்லல..??“ - கொதிக்கும் உறவினர்கள்..மாணவர்களுக்கு இடையேயான மோதல் - உயிரிழந்த பள்ளி மாணவன்

அரசு பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மாணவன் உயிரிழப்புக்கு பள்ளியின் ஆசிரியர்களின் கவனகுறைவுதான் தான் காரணம் என பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
x
கோவை ஆலாந்துறை அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் இரு தரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பள்ளியின் முன்னாள் மாணவன் கத்தியால் குத்தியதில் 3 பள் ளி மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இதில் ஒரு மாணவன் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்த சம்பத்தை கண்டித்து மாணவனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களிடையே மோதல் இருப்பது பள்ளி ஆசிரியர்களுக்கு தெரிய வந்தும் தடுக்காமல் இருந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் கூறியிருந்தால் மாணவனை பள்ளிக்கு அனுப்பாமல் தடுத்திருப்போம் என தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்