"முக கவசம் அணிந்தால் மட்டுமே மதுபானம்"

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கூடுதல் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
முக கவசம் அணிந்தால் மட்டுமே மதுபானம்
x
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கூடுதல் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,  முகக்கவசம் அணிந்து வரும் நுகர்​வோர்களுக்கு மட்டுமே மது வகைகள் விநியோகிக்கப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டமாக இருக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மதுபானங்கள் வாங்க வரும் 2 வாடிக்கையாளர்களுக்கு இடையே 6 அடி தூர சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மது வாங்கும்போது ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது எனவும், டாஸ்மாக் கடை​களில் பணியாற்றும் பணியாளர்கள் முக கவசம், கையுறை அ​ணிவதுடன் கிருமி நாசனி கொண்டும் கைகளை சுத்தம் செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்