மது பிரியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகத்தின் அறிவிப்பு

முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
x
கொரோனா பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

மேலும், மது வாங்கும்போது ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது, மது விற்பனை கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டமாக இருக்க கூடாது, 2 வாடிக்கையாளர்களுக்கு இடையே 6 அடி தூர சமூக இடைவெளி கட்டாயம், டாஸ்மாக் பணியாளர்களும் முக கவசம், கையுறை அணிந்திருக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்