ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணமா? - இந்த நம்பருக்குக் கால் பன்னுங்க

பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
x
பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

இன்று முதல் வரும்13ஆம் தேதி வரை 16 ஆயிரத்து 768 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.  கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் ஆகிய இடங்களில்  இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்காக கோயம்பேடு, தாம்பரம் என மொத்தம் 11 முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன. கொரோனோ பரவலை தடுக்கும் வகையில் 75 சதவீத இருக்கைகளுடன் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே மேம்பாலம் திறப்பால் இந்தாண்டு போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.  ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் 1800 425 6151, 044-2474 9002 என்ற கட்டணமில்லா எண்களில் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்