வெளிநாடுகளுக்கு செல்ல வந்த 27 பேருக்கு கொரோனா

சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல வந்த 27 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்டனர்.
x
சென்னையில் இருந்து சாா்ஜா, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு செல்ல வந்தவா்களுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது விடுமுறை முடித்து  வேலைக்காக செல்ல வந்த 27 பேருக்கு ரேபிட் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக அவர்களின்  விமான பயணத்தை ரத்து செய்தனர்.  பின்னர் 27 பயணிகளும் சென்னை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்