பெட்ரோல் போட தாமதமானதால் பங்க் ஊழியர் மீது தாக்குதல் - போதை ஆசாமிகள் கைது

திருக்கோவிலூர் அருகே, பெட்ரோல் போட தாமதம் ஆனதால் பங்க் ஊழியர்களை தாக்கிய 4 போதை ஆசாமிகளை போலீசார் கைது செய்தனர்.
x
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பெட்ரோல் பங்கிற்கு வந்த 4 பேர் கேனில் பெட்ரோல் கேட்டுள்ளனர். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்களுக்கு பெட்ரோல் வழங்க தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த 4 பேரும் பங்க் ஊழியர்களை தாக்கியதுடன் தகாத வார்த்தைகளால் திட்டியும் உள்ளனர். அதனை தடுக்க வந்த காவலரையும் அவர்கள் தாக்கவும் முயற்சித்துள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட சக்தி, சதீஷ், மணிகண்டன் மற்றும் மகேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்