தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளுக்கும் இந்த மாதம் இறுதி வரை விடுமுறை - உயர்கல்வித்துறை

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இல்லை என்பதை தெளிவுப்படுத்திய பள்ளிக்கல்வித்துறை 10,11,12ஆம் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என அறிவித்துள்ளது.
x
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இல்லை என்பதை தெளிவுப்படுத்திய பள்ளிக்கல்வித்துறை 10,11,12ஆம் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என அறிவித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பை தடுக்கும் வகையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.அந்த வரிசையில் பள்ளி கல்வித்துறை சார்பில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இல்லை என்றும் அதே சமயம் அந்த மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்படும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு நேரடி முறையில் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என கல்வித்துறை கூறியுள்ளது.அனைத்து வகை கல்லூரிகளும் இந்த மாதம் இறுதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும்,ஆன்லைன் வழியில் மாணவர்கள் கல்வி கற்கலாம் என்றும் உயர் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்