பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - கணித ஆசிரியர் போக்சோவில் கைது

புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
x
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள துவார் அரசு உயர்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சீனியப்பா. இவர் 6ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தன் பெற்றோரிடம் கூறவே, அவர்கள் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளனர். உடனடியாக இந்த விவகாரம் போலீசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதன்பேரில் போலீசார் கணித ஆசிரியர் சீனியப்பாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.



Next Story

மேலும் செய்திகள்