நேற்று ஒரே நாளில் 20,765 பேருக்கு பூஸ்டர் டோஸ்

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 20 ஆயிரத்து 765 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
x
முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது.

இந்நிலையில், முதல் நாளிலேயே  20 ஆயிரத்து 765 பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில், மொத்தம் 2 லட்சத்து 59 ஆயிரம்  தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளதாகவும்,

இதில் 84 ஆயிரம் பேர், 15 முதல் 18 வயதுடைய சிறார்கள் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 87புள்ளி 29 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 60 புள்ளி 20 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசிகளும் செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்