டாஸ்மாக் பார் டெண்டர் வழக்கு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

டாஸ்மாக் மதுபான கடைகளில் பார்கள் அமைப்பதற்கான டெண்டரை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
x
தமிழகம் முழுவதும், அரசு மதுபான கடைகளின் இணைப்பில் உள்ள பார்களில் , தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கு புதிய டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் பார்கள் மூடப்பட்டுள்ளதால், பழைய டெண்டரை நீட்டிக்க வேண்டும், நில உரிமையாளர்களின் தடையில்லா சான்றை கட்டாயப்படுத்த கூடாது போன்ற கோரிக்கைகளுடன் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாணையின் போது கொரோனா காலத்தில் பார்கள் மூடப்பட்டதால், தங்களுக்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.  மேலும் டெண்டர் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அனைத்து  வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல்  தள்ளிவைத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்