பார்மலின் ரசாயனம் கலந்த 200 கிலோ மீன்கள் விற்பனை - அதிகாரிகள் சோதனையில் அதிர்ச்சி

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பார்மலின் ரசாயனம் தடவிய 200 கிலோ மீன்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
x
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பார்மலின் ரசாயனம் தடவிய 200 கிலோ மீன்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பெரியக்குளம் நகராட்சியில் உள்ள மீன் விற்பனை செய்யும் கடைகளில் உணவுபாதுகாப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது கெடாமல் இருக்க மீன்கள் மீது பார்மலின் ரசாயனம் தடவப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வெளிமாவட்டத்திற்கும், சிறு வியாபாரிகளுக்கும் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 200 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்