ஓ.பன்னீர் செல்வம், ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு

சொத்து விவரங்களை மறைத்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
x
சொத்து விவரங்களை மறைத்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத்  மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட 
ஓ.பன்னீர்செல்வம்,தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திரநாத் ஆகியோர் வேட்பு மனுவில் தங்களது சொத்து விவரங்களை மறைத்து தவறான தகவல்களை அளித்ததாக தேனியைச் சேர்ந்த மிலானி என்பவர் எம்.பி. எம்.எல்.ஏ. களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழங்கில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீது குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதாகக் கூறி, வழக்கு பதிவு செய்ய கடந்த 7ம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து சிறப்பு நீதிமன்ற உத்தரவுப்படி அதிமுக ஒருங்கிணைப்பாளரும் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினருமான ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் தேனி மக்களவை உறுப்பினருமான ரவீந்திரநாத் ஆகிய இருவர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்