மண்ணெண்ணெய் அடுப்பிற்குள் வைத்து போதைப்பொருள் கடத்தல் - இளைஞர் கைது

மதுரையிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு உயர்ரக போதைப் பொருட்களைக் கடத்த முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
x
மதுரையிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு உயர்ரக போதைப் பொருட்களை மண்ணெண்ணெய் அடுப்பிற்குள் வைத்து கடத்த முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் படி, மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த ஷகில் அஹமது என்பவர் பழைய மண்ணெண்ணெய் அடுப்பு ஒன்றில் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருப்பது கண்டறியப்பட்டது. அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, இது தன்னுடைய பொருள் அல்ல என்றும், விமான நிலையம் வந்த போது அறிமுகம் இல்லாத நபர் இலங்கையில் சேர்த்து விடும்படி கேட்டதன் பேரில் எடுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்