" பயிற்சி வகுப்புகளை ஒத்திவைக்க வேண்டும்" - ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நாளை முதல் நடத்த திட்டமிட்டிருந்த ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகளை ஒத்தி வைக்க வேண்டும் என தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
x
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நாளை முதல் நடத்த திட்டமிட்டிருந்த ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகளை ஒத்தி வைக்க வேண்டும் என தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கற்றல் மற்றும் கற்பித்தலை வலுவூட்டும் வகையில் ஆசிரியர்களுக்கு  நாளை முதல்  20 நாட்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என  பள்ளிக்கல்வி துறை தெரிவித்திருந்தது. இந்தநிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஒரே அறையில் 50 ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கொரோனா பரவும் நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பயிற்சி வகுப்புகளை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்