ஊறுகாய் பாக்கெட்டில் செத்து கிடந்த பூரான் - உணவுக்காக பாக்கெட்டை பிரித்த போது அதிர்ச்சி

சிவகாசியில் பிரபல நிறுவனத்தின் ஊறுகாய் பாக்கெட்டில் செத்துக்கிடந்த பூரானால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
x
சிவகாசியில் பிரபல நிறுவனத்தின் ஊறுகாய் பாக்கெட்டில் செத்துக்கிடந்த பூரானால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் திருவள்ளுவர் காலனியில் குடியிருப்பவர் செல்வின். இவரது மைத்துனர் எபனேசர் வழக்கம்போல சாப்பாட்டுக்காக ஊறுகாய் வாங்கி வந்துள்ளார். செல்வின் உணவு சாப்பிடும் போது அந்த பிரபல நிறுவனத்தின் ஊறுகாய் பாக்கெட்டை பிரித்துள்ளார். அப்போது, அந்த பாக்கெட்டில் இறந்த நிலையில் விசத்தன்மை கொண்ட பூரான் ஒன்று இருந்துள்ளது. இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து பல்வேறு தரப்பினருக்கும் அதனை பகிர்ந்துள்ளார். மேலும், ஊறுகாயில் பூரான் கிடந்தது தொடர்பாக செல்வின் உணவுப்பாதுகாப்பு துறையிடம் புகார் அளித்துள்ளார். சுகாதாரம் இல்லாமல் அஜாக்கிரதையாக செயல்பட்டுவரும் பிரபல ஊறுகாய் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்