பயங்கர சத்தத்துடன் வெடித்த டிரான்ஸ்பார்மர் - கரும்புகையுடன் எரியும் தீ

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே மின்பகிர்மான அலுவலகத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
x
உள்ள டிரான்ஸ்பார்மரில் திடீரென தீவிபத்தால் கரும்புகை, தீ மளமளவென எரிந்து வருகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட கன்னிவாடி ஆலந்தூரான்பட்டியிலே கன்னிவாடி அருகே தமிழக அரசு மின் பரிமான அலுவலகம் உள்ளது. செம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் இருந்து கன்னிவாடி மின்சார வாரிய அலுவலகத்திற்கு மின்சாரம் கொண்டு வரப்பட்டு  இங்கிருந்து கன்னிவாடி மின் பகிரிமான அலுவலகத்திலிருந்து கன்னிவாடி, பண்ணப்பட்டி ஸ்ரீராமபுரம் காமாட்சிபுரம் உட்பட பல்வேறு கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திடீரென மின்சார டிரான்ஸ்பார்மர் பயங்கர சத்தத்துடன் வெடித்து தற்போது கரும்புகையுடன் தீ பிடித்து மளமளவென எரிந்து வருகிறது. தீ பிடித்துஎரிந்து அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. இதனைக் கண்ட  பொதுமக்கள் தீயணைப்புத் துறையினர் மற்றும் மின்சார வாரிய துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இருந்தபொழுதும் செம்பட்டி மின்வாரிய பகிர்மான அலுவலகத்தில் மின்சாரத்தை நிறுத்தப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தீயை அணைக்க. ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர் மற்றும் திண்டுக்கல் தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்துடன் தீயை அணைத்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்