முழு ஊரடங்கு எதிரொலி : முண்டியடித்து மது வாங்கிச் செல்லும் மதுப்பிரியர்கள்

மதுபானக் கடைகளில், மதுப் பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக் கவசம் அணியாமலும் முண்டியடித்துக்கொண்டு மது வாங்கிச் சென்றனர்.
x
முழு ஊரடங்கு எதிரொலி : முண்டியடித்து மது வாங்கிச் செல்லும் மதுப்பிரியர்கள் 

சிதம்பரம் பேருந்து நிலையத்தில் உள்ள மூன்று மதுபானக் கடைகளில், மதுப் பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக் கவசம் அணியாமலும் முண்டியடித்துக்கொண்டு மது வாங்கிச் சென்றனர். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலையில், ஒரே இடத்தில் அமைந்துள்ள 3  டாஸ்மாக் மதுக்கடைகளில், மதுவை வாங்க, அதிக அளவில் கூட்டம் குவிந்தது. இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி விட்டு, டாஸ்மார்க் கடையில் வரிசையில் காத்திருந்ததால், ஆம்பூர் பைபாஸ் சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

முழு ஊரடங்கால், டாஸ்மாக் கடைகளில் நேற்று மதுபானங்களை வாங்க கூட்டம் அலைமோதியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த மணலூர்பேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப் பிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுபானங்களை, முண்டியடித்துக்கொண்டு வாங்கிச்சென்றனர்

Next Story

மேலும் செய்திகள்