"மத்த நாள்ல யாரும் மீன் வாங்க வரமாட்டாங்க" - ஞாயிறு ஊரடங்கு... தவிக்கும் மீனவர்கள்

"மத்த நாள்ல யாரும் மீன் வாங்க வரமாட்டாங்க" - ஞாயிறு ஊரடங்கு... தவிக்கும் மீனவர்கள்
x
நாளை முழு ஊரடங்கை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. படகுகள் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீன்பிடித் தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில் செய்யக்கூடிய சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ள காரணத்தால், 4 கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் பாதிக்கப்படுள்ளது. இதனால், இது போன்ற வேலைநிறுத்த காலங்களில் அரசு மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

Next Story

மேலும் செய்திகள்