மோசமான வானிலையால் வயல்வெளி அருகே தரையிறங்கிய ஹெலிகாப்டர் !

சத்தியமங்கலம் மலைப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் ஹெலிகாப்டர் தரை இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
x
சத்தியமங்கலம் மலைப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் ஹெலிகாப்டர் தரை இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த தம்பதியினர்  பாரத் மற்றும் ஷீலா. இவர்கள் மருத்துவ தேவைக்காக கேரள மாநிலம் கொச்சிக்கு வாடகை ஹெலிகாப்டர் மூலம்  பெங்களூரிலிருந்து புறப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டரை பைலட் கர்னல் ஜஸ்பால் இயக்கினார். இதனிடையே  ஹெலிகாப்டர் சத்தியமங்கலம், கடம்பூர் வனப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக சிக்னல் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், கடம்பூர், அத்தியூர் மலை பகுதியில் பெருமாள் என்பவரது விவசாய நிலத்தில் ஹெலிகாப்டரை பைலட் ஜஸ்பால் தரை இறக்கினார்.  ஹெலிகாப்டர் விளை நிலத்தில் தரையிறங்குவதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஹெலிகாப்டர் அருகில் சென்று அப்பகுதியினர் பார்த்த போது, பயணம் செய்தவர்கள் பத்திரமாக அதில் இருந்து இறங்கி வந்துள்ளனர். மேலும், கடம்பூர் போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்