தண்டவாளத்தில் அறுந்துகிடந்த மின்கம்பிகள் - நடுவழியில் நின்ற எக்ஸ்பிரஸ் ரயில் - பரபரப்பு காட்சிகள்

சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் வழியில் தண்டவாளத்தில் மின்சார கம்பிகள் அறுந்து கிடந்தன, ரயில்வே ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
x
ரயில்வே தண்டவாளத்தில் அறுந்து கிடந்த மின்சார கம்பிகளால் சிலம்பு எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது. சென்னையில் இருந்து காரைக்குடி, விருதுநகர் வழியாக செங்கோட்டை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தொட்டியகுளம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் மின்சார கம்பிகள் அறுந்து கிடப்பதை கண்ட உடன் ரயில் ஓட்டுனர் நிறுத்தியுள்ளார். பின்னர், ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். ரயில்வே ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்