"ஓபிசி இட‌ஒதுக்கீடு - மிக முக்கிய வெற்றி" முதலமைச்சர் ஸ்டாலின்

27 சதவீத இட ஒதுக்கீடு தீர்ப்பு தி.மு.கவுக்கும், தமிழக மக்களுக்கும் கிடைத்த மிக முக்கியமான வெற்றி என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
27 சதவீத இட ஒதுக்கீடு தீர்ப்பு தி.மு.கவுக்கும், தமிழக மக்களுக்கும் கிடைத்த மிக முக்கியமான வெற்றி என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை பாராட்டி வரவேற்பதாகவும், இதன்மூலம், ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 4 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகம், அரசியல் களத்திலும், நீதிமன்றங்களிலும் நடத்திய இடைவிடாத போராட்டத்தின் விளைவாக, ஓ.பி.சி இடஒதுக்கீடு இவ்வாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது என தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இந்த தீர்ப்பு சமூகநீதி வரலாற்றில் முக்கியமான மைல்கல் என்றும் குறிபிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்