பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு விவகாரம், சென்னையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து தமிழக பாஜக சார்பில் கண்டன சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
x
பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து தமிழக பாஜக சார்பில் கண்டன சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், விபி துரைசாமி, குஷ்பு ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் 200 - க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செயற்குழு சிறப்பு அழைப்பாளர் குஷ்பு, பஞ்சாப் நிகழ்வுக்கு, சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் முதல்வர் சரண்ஜித் சிங், பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்