நடிகர் விஜய் சேதுபதி மீது அவதூறு வழக்கு..இறுதி விசாரணை ஜனவரி 11க்கு தள்ளிவைப்பு

தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய் சேதுபதி தாக்கல் செய்த மனு மீதான இறுதி விசாரணை, ஜனவரி 11 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
x
தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய் சேதுபதி தாக்கல் செய்த மனு மீதான இறுதி விசாரணை, ஜனவரி 11 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 2 ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை தாம் சந்தித்த போது, தனது சாதி பெயரை குறிப்பிட்டு, தன்னை விஜய் சேதுபதி இழிவுப்படுத்தியதாக  சென்னை சைதாப்பேட்டை சேர்ந்த மகா காந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், வழக்கின் இறுதி விசாரணையை ஜனவரி 11 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்