வெடிகுண்டு வீசி ஆற்றில் மீன் பிடிப்பு - அதிர்ச்சி சம்பவம்

தென்பெண்ணை ஆற்றில் நாட்டு வெடிகுண்டு வீசி மீன் பிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணகிரி ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
x
தந்தி டிவி செய்தி எதிரொலியாக, தென்பெண்ணை ஆற்றில் நாட்டு வெடிகுண்டு வீசி மீன் பிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணகிரி ஆட்சியர் எச்சரித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றில் சிலர் நாட்டு வெடிகளை வீசி ஆபத்தான முறையில் மீன் பிடித்து வந்தனர். அவ்வாறு பிடிக்கப்பட்ட மீன்களை உண்டவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டதுடன், ஆற்றில் மீன்களின் இனப்பெருக்கமும் பாதிக்கப்பட்டது. இந்த செய்தி தந்தி டிவியில் பிரத்யேகமாக வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயசந்திதர பானு ரெட்டி, நாட்டு வெடிகளை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்கள் மீது கடும் தண்டனையும் அபராதமும் விதிக்கபடும் என்று எச்சரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்