தமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா

தமிழகத்தில் பரிசோதனைக்கு ஏற்ப கொரோனா தொற்று கண்டறியப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
x
தமிழகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொற்றுப் பரவல் இரட்டிப்பாகி உள்ளது.

தமிழகத்தில் கடந்த 5ம் தேதி 4,862  பேர் கொரோனாவால், பாதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய பாதிப்பு 6 ஆயிரத்து 983 ஆக அதிகரித்தது.

இந்நிலையில், பரிசோதனைக்கு ஏற்ப நோய்த்தொற்று கண்டறியப்படுவோர், 2 புள்ளி 6 சதவிகிதத்தில் இருந்து 4 புள்ளி 1 சதவிகிதமாகவும்,

அதிகபட்சமாக சென்னையில் (TPR)  7 புள்ளி 3 சதவிகிதத்தில் இருந்து 9 புள்ளி 6 சதவிகிதமாக ஆகவும் உயர்ந்து உள்ளனர்.

செங்கல்பட்டில் 8 புள்ளி 7 சதவிகிதமாகவும் , ராணிப்பேட்டையில் 6 புள்ளி 6 சதவிகிதமாகவும், திருவள்ளுரில் 5 புள்ளி 5 சதவிகிதமாகவும், நோய் பாதிப்பு கண்டறியப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்