தமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா
தமிழகத்தில் பரிசோதனைக்கு ஏற்ப கொரோனா தொற்று கண்டறியப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொற்றுப் பரவல் இரட்டிப்பாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த 5ம் தேதி 4,862 பேர் கொரோனாவால், பாதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய பாதிப்பு 6 ஆயிரத்து 983 ஆக அதிகரித்தது.
இந்நிலையில், பரிசோதனைக்கு ஏற்ப நோய்த்தொற்று கண்டறியப்படுவோர், 2 புள்ளி 6 சதவிகிதத்தில் இருந்து 4 புள்ளி 1 சதவிகிதமாகவும்,
அதிகபட்சமாக சென்னையில் (TPR) 7 புள்ளி 3 சதவிகிதத்தில் இருந்து 9 புள்ளி 6 சதவிகிதமாக ஆகவும் உயர்ந்து உள்ளனர்.
செங்கல்பட்டில் 8 புள்ளி 7 சதவிகிதமாகவும் , ராணிப்பேட்டையில் 6 புள்ளி 6 சதவிகிதமாகவும், திருவள்ளுரில் 5 புள்ளி 5 சதவிகிதமாகவும், நோய் பாதிப்பு கண்டறியப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
Next Story