கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டல் - நகைகளை கொடுத்து மகனை மீட்ட தாய்

ஸ்ரீவைகுண்டம் அருகே பட்டப்பகலில் சிறுவன் கழுத்தில் கத்தியை வைத்து பெற்றோரை மிரட்டி 14 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
x
செய்துங்கநல்லூரை சேர்ந்த தம்பதியினர் சுதா மற்றும் உதயக்குமார். இவரது மகன் வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த கொள்ளையன் சிறுவன் கழுத்தில் கத்தியை வைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளார். அப்போது, சிறுவனின் தாய் அங்கு வரவே அவரது கழுத்தில் உள்ள நகையை தராவிட்டால் சிறுவனின் கழுத்தை அறுத்துவிடுவதாக கொள்ளையன் மிரட்டியுள்ளார். இதனையடுத்து, சிறுவனின் தாயார் நகையை கொடுத்ததும் கொள்ளையன் தப்பிச்சென்றுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்