சுயமருத்துவத்தால் நிகழ்ந்த விபரீதம் - 12 மாத குழந்தை மூச்சுத்திணறி பலி

முசிறி அருகே பிறந்த குழந்தைக்கு விளக்கெண்ணெய் கொடுத்ததால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுயமருத்துவத்தால் நிகழ்ந்த விபரீதம் - 12 மாத குழந்தை மூச்சுத்திணறி பலி
x
முசிறி அருகே பிறந்த குழந்தைக்கு விளக்கெண்ணெய் கொடுத்ததால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம், அய்யம்பாளையத்தை சேர்ந்த பாலமுருகன் - சாந்தி தம்பதிக்கு இரண்டு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. வயிற்றை சுத்தம் செய்வதற்காக, இரண்டு சொட்டு விளக்கெண்ணெய் குழந்தைக்கு கொடுக்கப்பட்டது. சிறிது நேரத்தில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. மருத்துவரின் பரிந்துரையின்றி சுயமருத்துவத்தால் இரண்டு மாத குழந்தை பலியாகியுள்ளது. இதுபோன்ற செயலில் பெற்றோர்கள் ஈடுபட வேண்டாம் என்று சித்த மருத்துவர் சாய் சதிஷ் அறிவுறுத்தியுள்ளார். 




Next Story

மேலும் செய்திகள்