ஆட்சியர் அலுவலகம் முன் பள்ளத்தில் சிக்கிய வாகனங்கள்

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறும் பகுதிக்குள் நுழைந்த வாகனங்கள் பள்ளத்தில் சிக்கிக் கொண்டன.
x
கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறும் பகுதிக்குள் நுழைந்த வாகனங்கள் பள்ளத்தில் சிக்கிக் கொண்டன. ஆட்சியர் அலுவலகம் முன்பாக, பாதாள சாக்கடை குழாய் மற்றும் தண்ணீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பகுதி ஒரு வழி சாலையாக மாற்றப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர், அறிவிப்பு பலகை மற்றும் தடுப்புகளை வைத்து பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். தடுப்புகளை மீறி அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு கார்கள் மற்றும் ஒரு ஆட்டோ, குழாய் பதிக்கப்பட்ட குழியில் சிக்கிய நிலையில், தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சிக்கிய வாகனங்கள் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் மீட்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்