பாம்போடு நெற்கதிர் கட்டைத் தூக்கிச் சென்ற பெண்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பெண் ஒருவர் நெற்கதிர் கட்டோடு பாம்பையும் சேர்த்துத் தூக்கிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
x
முத்துப்பட்டியைச் சேர்ந்த சின்னையா என்பவரது தோட்டத்தில் நெற்கதிர் அறுக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது நெற்கதிர்களைக் கட்டி, பெண் தொழிலாளி ஒருவர் தலையில் சுமந்து சென்றார். கதிர் கட்டில் ஏதோ நெளிந்து கொண்டு இருப்பதை உணர்ந்த பெண், பயத்தில் கதிர்கட்டைக் கீழே போட்டு விட்டுப் பார்த்த போது, அதில் 5 அடி நீள சாரைப் பாம்பு ஒன்று "ஹாயாக" படுத்துக் கொண்டு போஸ் குடுத்ததைக் கண்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தார். தகவலறிந்து வந்த போலீசார் பாம்பை பத்திரமாகப் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்

Next Story

மேலும் செய்திகள்