நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கிய விவசாயி பலி

நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கிய விவசாயி..உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி
x
கள்ளக்குறிச்சி மாவட்டம் வி. அலம்பலம் கிராமத்தை சேர்ந்த  ராமர் என்பவரின்  நெல் அறுவடை இயந்திரம் வீரபயங்கரம் பகுதியை சேர்ந்த வரதன் என்பவரின் பொறுப்பில் இருந்துள்ளது. இந்த நிலையில் ராமரின் அனுமதி இல்லாமல் நெல் அறுவடை இயந்திரத்தை விஜயகுமார் என்பவர் எடுத்து செல்ல முயன்றுள்ளார். அப்போது, அதனை தடுத்து நிறுத்த முயன்ற விவசாயி வரதனின் மீது நெல் அறுவடை இயந்திரம் ஏறியுள்ளது. அதில் சம்பவ இடத்திலேயே வரதன் உயிரிழந்த நிலையில், விஜயகுமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்