பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு
சிவகங்கையின் அனுமதியின்றி ஊர்வலமாக சென்று கூட்டம் நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட 452 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கையின் அனுமதியின்றி ஊர்வலமாக சென்று கூட்டம் நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட 452 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர்நாச்சியார் பிறந்தநாளையொட்டி, கடந்த மூன்றாம் தேதி தமிழக பாஜக சார்பில் சிவகங்கையில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செய்யப்பட்டது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட 452 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாஜக எம்எல்ஏக்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம், மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது. கொரோனா விதிமீறல், அனுமதியின்றி அதிக வாகனங்களில் சென்று போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அனுமதியின்றி பேனர் வைத்ததாக 37 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
Next Story