தேம்பி தேம்பி அழுத அமைச்சர் - பொங்கல் பரிசு விழாவில் சோகம்

பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கணேசன் தனது மனைவியின் மறைவை நினைத்து கண்ணீர் விட்டு அழுதார்.
x
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கழுதூரில்  பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் விழாவினை தொழிலாளர் நலன் துறை அமைச்சர் கணேசன் தொடங்கி வைத்தார். அப்போது கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்போது கடந்த மாதம் தனது மனைவி இறந்ததை குறிப்பிட்டு பேசிய அமைச்சர் கணேசன், கண்ணீர் விட்டு அழுத சம்பவம் பொதுமக்களையும் கவலையடைய செய்தது.


Next Story

மேலும் செய்திகள்