ஆதிபராசக்தி கோயிலில் ஆட்சியர் ஆய்வு

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
x
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். கோவிலுக்கு சென்ற கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு நடத்தியுள்ளார். அங்குள்ள மருத்துவ குழுவிடம் கோயிலுக்கு வரும் பக்தர்களை தனியாக கண்காணிக்க குழு அமைத்திடுமாறும், அரசு நெறிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்யுமாறும் ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் இருமல், காய்ச்சல் அறிகுறி இருக்கும் பட்சத்தில் உடனடியாக பரிசோதனை செய்திட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்