சிறுமியை கடித்த வீட்டு வளர்ப்பு நாய்..நாயின் உரிமையாளர் கைது

சென்னையில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை வீட்டு வளர்ப்பு நாய் கடித்த நிலையில் நாயின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
சிறுமியை கடித்த வீட்டு வளர்ப்பு நாய்..நாயின் உரிமையாளர் கைது
x
நொளம்பூர் பகுதியில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதனிடையே அங்கு வசிக்கும் ஜெயலட்சுமி என்பவர் தான் வளர்க்கும் நாயை வாக்கிங் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த நாய் அங்கு விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை கடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், நாய் உரிமையாளரை கைது செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்