"கண்டிப்பாக நேரடி பொது தேர்வு நடைபெறும்" - அமைச்சர் அன்பில் மகேஷ்

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக நேரடி பொது தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
x
சென்னை திருவல்லிக்கேணியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கி வைத்த அவர், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உடன் சேர்ந்து வீடு வீடாக சென்று இல்லம் தேடி கல்வி குறித்த விழிப்புணர்வு பிரசுரத்தை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருவதால், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக நேரடி பொது தேர்வு நடத்தப்படும் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்