கூடுதல் கட்டுப்பாடுகள்? - முதல்வர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் ஓமிக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
x
தமிழகத்தில் அண்மையில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் வரும் 10 ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அறிவித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை, தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இதில், மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொங்கல் பண்டிகைகளின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்தும் முக்கிய ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்