ரசிகர்களிடையே சிக்கி தவித்த நடிகர் முகேன் - செல்ஃபி மோகத்தால் நாட்டிய விழாவில் பரபரப்பு

மாமல்லபுரத்தில் நடந்த நாட்டிய விழாவில் நடிகர் முகேன் உடன் செல்பி எடுக்க ரசிகர்கள் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
x
மாமல்லபுரத்தில் நடந்த நாட்டிய விழாவில் நடிகர் முகேன் உடன் செல்பி எடுக்க ரசிகர்கள் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுற்றுலாத்துறை சார்பில் நடந்த விழாவில், சிறப்பு விருந்தினராக வேலன் படத்தின் கதாநாயகனாக நடித்துள்ள நடிகர் முகேன் கலந்துக் கொண்டார். ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று மெல்லிசை குழுவினருடன் சேர்ந்து பாடல் ஒன்றை பாடினார். ஒரு கட்டத்தில் ஆர்வமிகுதியில் முகேன் உடன் செல்பி எடுப்பதற்காக, ரசிகர்கள் தடுப்பை மீறி மேடையில் ஏறினர். ரசிகர்களிடையே சிக்கிக் கொண்ட நடிகர் முகேனை, சுற்றுலாத் துறையினர் பத்திரமாக மீட்டு, காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.  


Next Story

மேலும் செய்திகள்